ஐபிஎல்-2020

இதில் சந்தேகம் எதுவும் உள்ளதா?: மும்பை அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல சச்சின் ஆதரவு

DIN

இந்த வருட ஐபிஎல் போட்டியை மும்பை அணி வெல்லும் என சச்சின் டெண்டுல்கர் கணித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றது. 

இந்நிலையில் ஒரு பேட்டியில் மும்பை அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுலர் கூறியதாவது:

இந்த வருடமும் ஐபிஎல் கோப்பையை மும்பை அணிதான் வெல்லும். இதில் சந்தேகம் எதுவும் உள்ளதா? எப்போதும் நீல வண்ண உடையில் தான் நான் இருப்பேன். மும்பையும் இந்தியர்களும் ஒன்றுசேரும்போது மும்பை இந்தியன்ஸ் ஆகிவிடுகிறது. 

ஐபிஎல் போட்டியில் எல்லா அணிகளும் சரிசம அளவில் பலமாக உள்ளன. மிகவும் பரபரப்பான போட்டியாக இருக்கும். எல்லா ஆட்டங்களிலும் போட்டி மனப்பான்மையுடன் வீரர்கள் விளையாடுவார்கள். 53 நாள்கள் நடக்கும் போட்டியில் வெற்றி உணர்வுடன் உள்ள அணி சிறப்பாக விளையாடும். 

போட்டியை நல்ல முறையில் தொடங்க வேண்டும். டெஸ்ட் தொடரிலும் ஆரம்பத்தில் நன்றாக விளையாட விரும்புவோம். முதல் ஆட்டத்தில் நன்கு விளையாடினால் தொடரை நல்ல முறையில் முடிப்போம். அதேபோல் தான் ஐபிஎல் போட்டியிலும். நல்ல தொடக்கம் அணிகளுக்கு அமையவேண்டும் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT