ஐபிஎல்-2020

இஷாந்த் காயம்: பஞ்சாப்புடனான மோதலில் களமிறங்குவாரா?

DIN


தில்லி கேபிடல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு பயிற்சியின்போது காயம் ஏற்பட்டதால், முதல் ஆட்டத்தில் அவர் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.

இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் தில்லியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி தில்லி அணி நிர்வாகி ஒருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்ததாவது:

"நேற்று (சனிக்கிழமை) பயிற்சியின்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. ஆனால் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு அவரது காயம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு அதற்கேற்றவாறு முடிவு எடுக்கப்படும். இந்த விஷயத்தில் எங்களது மருத்துவக் குழுதான் இறுதி முடிவெடுக்கும்."

இதனால், இன்றைய ஆட்டத்தில் இஷாந்த் சர்மா பங்கேற்பது சிக்கலாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப் பதிவுக்குப் பின் தோ்தல் விதிமுறைகளை தளா்த்த கோரிக்கை

தீத்தொண்டு வார விழா: துண்டுபிரசுரங்கள் விநியோகம்

குமரி மாவட்டத்தில் குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 1,545 கண்காணிப்புக் கேமராக்கள்

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT