ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன.
பஞ்சாபில் உள்ள பதான்கோட் மாவட்டத்தில் கொள்ளையா்கள் தாக்கியதில் ரெய்னாவின் உறவினா்கள் இருவர் உயிரிழந்துள்ளார்கள். இதையடுத்து, இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா விலகியுள்ளார். மேலும், சொந்தக் காரணங்களுக்காக மற்றொரு சிஎஸ்கே வீரரான ஹர்பஜன் சிங்கும் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில் சென்னை அணிக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் ரெய்னா தெரிவித்ததாவது:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்துகள். நான் அங்கு இல்லை என்பதை என்னால் நம்பமுடியவில்லை. எனினும் என்னுடைய எல்லா வாழ்த்துகளும் உங்களிடம் உள்ளன. நல்ல உணர்வுகளை உங்களுக்கு அனுப்புகிறேன். ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.