ஐபிஎல் போட்டியில் அதிகமுறை ஆட்ட நாயகன் விருதை கிறிஸ் கெயில் பெற்றுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் கிறிஸ் கெயில் அதிகமுறை ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுள்ளார். அவர் 21 முறை இந்தப் பெருமையைப் பெற்றுள்ளார். 20 ஆட்ட நாயகன் விருதுகளுடன் டி வில்லியர்ஸ் 2-ம் இடத்தில் உள்ளார்.
ஐபிஎல் போட்டியில் அதிகமுறை ஆட்ட நாயகன் விருது பெற்ற வீரர்கள்
21 - கிறிஸ் கெயில்
20 - டி வில்லியர்ஸ்
17 - டேவிட் வார்னர்
17 - ரோஹித் சர்மா
17 - தோனி
16 - யூசுப் பதான்
15 - ஷேன் வாட்சன்