ஐபிஎல்-2020

ஐபிஎல் போட்டி தொடர்பாக மனமாற்றம் அடைந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்: கெவின் பீட்டர்சன் ஆச்சர்யம்!

DIN

ஐபிஎல் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து வீரர்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பாராட்டியதற்கு முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்றைய ஆட்டத்தில் விளையாடிய ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகிய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் வெளியிட்டது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். முக்கியமான ஐபிஎல் ஆட்டத்தில் விளையாடும் எங்கள் வீரர்களுக்கு வாழ்த்துகள் என்று ட்வீட் வெளியிட்டது.

இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் இதற்குப் பதில் அளித்ததாவது: 8,9 வருடங்களுக்கு முன்பு இப்படியொரு ட்வீட்டை எண்ணிப் பாருங்கள். ஐபிஎல் மூலம் நல்ல முறையில் பலன் அடையும் வீரர்களுக்காக மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

இங்கிலாந்துக்காக 104 டெஸ்டுகளில் விளையாடியுள்ள கெவின் பீட்டர்சன், ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிக்காக விளையாடியுள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு, ஐபிஎல் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஊக்கம் அளிக்கவில்லை. எனினும் ஐபிஎல் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் விளையாட வேண்டும் என பீட்டர்சன் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்த விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து கேப்டன் ஆண்ட்ரூ ஸ்டிராஸுடன் பீட்டர்சனுக்குக் கருத்து மோதலும் ஏற்பட்டது. பெரிய தொகைக்கு ஐபிஎல் ஏலத்தில் பீட்டர்சன் தேர்வானபோது இங்கிலாந்து வீரர்கள் அவர் மீது பொறாமைப்பட்டதாக முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

SCROLL FOR NEXT