ஐபிஎல்-2020

பஞ்சாப் அணி தொடர்ந்து வெற்றி பெற வேண்டும்: கிறிஸ் கெயில் விருப்பம்

DIN


ஐபிஎல் போட்டியின் 46-ஆவது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தியது. புள்ளிகள் பட்டியலில் பின்தங்கியிருந்த பஞ்சாப், இந்த வெற்றியால் 4-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 

ஷார்ஜாவில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பஞ்சாப் 18.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து வென்றது. அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட கிறிஸ் கெயில் ஆட்டநாயகன் ஆனார். 

இந்த வெற்றி குறித்து பஞ்சாப் அணி வீரர் கிறிஸ் கெயில் கூறியதாவது:

ஐந்து ஆட்டங்கள் தொடர்ச்சியாக வென்றுள்ளோம். அணியின் கோணத்திலிருந்து பார்க்கும்போது இது பெரிய சாதனை. இன்னும் இரு வெற்றிகள் பெற்றால் மட்டும் தான் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற முடியும். இதற்குக் குறைவாக நாங்கள் சென்றுவிடக்கூடாது. அணியினர் அனைவரும் இந்த வெற்றியில் பங்களித்துள்ளார்கள். பந்துவீச்சாளர்கள் அருமையாகப் பந்துவீசினார்கள். தனது தந்தை இறந்த பிறகு மன்தீப் சிங் விளையாடிய 2-வது ஆட்டம் இது. அவரும் அற்புதமாக விளையாடினார் என்றார்.

புள்ளிகள் பட்டியலில் 4-ம் இடத்தில் உள்ள பஞ்சாப் அணி, அக்டோபர் 30 அன்று ராஜஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT