சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
13-வது ஐபிஎல் சீசனின் 47-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், தில்லி கேபிடல்ஸ் அணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) துபையில் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற தில்லி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
தில்லி அணியில் மாற்றம் எதுவுமில்லை.
ஹைதராபாத்தில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஜானி பேர்ஸ்டோவ், பிரியம் கர்க், கலீல் அகமதுக்குப் பதில் கேன் வில்லியம்சன், ரித்திமான் சஹா மற்றும் ஷபாஸ் நதீம் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.