சிஎஸ்கே அணிக்கு அதன் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவளிக்கவேண்டும் என்று ஆல்ரவுண்டர் பிராவோ கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டியிலிருந்து காயம் காரணமாக சிஎஸ்கே அணி வீரர் பிராவோ விலகியுள்ளார். இந்த வருடம் ஆறு ஆட்டங்களில் விளையாடியுள்ள பிராவோ, 6 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். எகானமி ரேட் - 8.57. பேட்டிங்கில் ஏழு ரன்கள் மட்டும் எடுத்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கிளம்பும் முன்பு ரசிகர்களிடம் சில கருத்துகளை பிராவோ தெரிவித்துள்ளார். விடியோவில் அவர் கூறியதாவது:
எனது அணியை விட்டு விலகுவது வேதனையாக உள்ளது. சிஎஸ்கே ரசிகர்கள் அனைவரும் அவர்களுடைய அணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்கவேண்டும். நாங்களும் ரசிகர்களும் எதிர்பார்த்தது போல இந்த வருடம் அமையவில்லை. எங்களுடைய சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தினோம். எனினும் நாங்கள் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை. தொடர்ந்து ஆதரவு அளியுங்கள். ஒரு சாம்பியன் போல நாங்கள் வலுவாகத் திரும்ப வருவோம். ஐபிஎல் போட்டியில் மிகச்சிறந்த அணியின் ரசிகராகவும் வீரராகவும் இருப்பதில் நாம் பெருமை கொள்ளவேண்டும் என்றார்.
மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணி அடுத்ததாக வெள்ளியன்று மும்பைக்கு எதிராக விளையாடவுள்ளது.