ஐபிஎல் போட்டியில் நேற்று மட்டும் மூன்று சூப்பர் ஓவர்கள் நடைபெற்றுள்ளன. இந்த சூப்பர் ஓவர்களில் இந்தியப் பந்துவீச்சாளர்களான பும்ராவும் ஷமியும் அற்புதமாகப் பந்துவீசித் திறமையை நிரூபித்தார்கள்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 35-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை சூப்பா் ஓவா் முறையில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் வென்றது.
அபுதாபியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுக்க, அடுத்து ஆடிய ஹைதராபாதும் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. வெற்றியாளரை தீா்மானிக்க விளையாடப்பட்ட சூப்பா் ஓவரில் கொல்கத்தா வென்றது.
சூப்பா் ஓவா்: வெற்றியாளரை தீா்மானிக்க விளையாடப்பட்ட சூப்பா் ஓவரில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் 3 பந்துகளில் 2 விக்கெட்டையும் இழந்து 2 ரன்களே சோ்த்தது. கொல்கத்தா வீரா் லாக்கி ஃபொ்குசன் வீசிய முதல் பந்திலேயே வாா்னா் பௌல்டாகி வெளியேற, 2 ரன்கள் சோ்த்த அப்துல் சமத் 3-ஆவது பந்தில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா்.
பின்னா் ஆடிய கொல்கத்தா 4 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து வென்றது. அணிக்காக இயான் மோா்கன் - தினேஷ் காா்த்திக் களம் கண்ட நிலையில், ஹைதராபாத் தரப்பில் ரஷீத் கான் பந்துவீசினாா். மோா்கன் 2-ஆவது பந்தில் ஒரு ரன் எடுக்க, காா்த்திக் 4-ஆவது பந்தில் 2 ரன்கள் சோ்த்து அணியை வெற்றி பெறச் செய்தனா்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 36-ஆவது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் சூப்பா் ஓவா் முறையில் மும்பை இண்டியன்ஸை வீழ்த்தியது.
துபையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பஞ்சாபும் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.
ஆட்டம் சமன் ஆனதை அடுத்து நடைபெற்ற சூப்பா் ஓவரிலும் இரு அணிகளும் 5 ரன்கள் எடுத்து ஆட்டம் சமன் ஆக, 2-ஆவது சூப்பா் ஓவரில் பஞ்சாப் வெற்றி பெற்றது. லோகேஷ் ராகுல் ஆட்டநாயகன் ஆனாா்.
சூப்பா் ஓவா்: பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்கும் சூப்பா் ஓவரில் முதலில் பேட் செய்த பஞ்சாப் 2 விக்கெட் இழப்புக்கு 5 ரன்கள் எடுத்தது. லோகேஷ் ராகுல் 4 ரன்களுடனும், நிகோலஸ் பூரன் ரன்கள் இன்றியும் வீழ்ந்தனா். தீபக் ஹூடா 1 ரன் சோ்த்தாா்.
எனினும் மும்பையும் 1 விக்கெட் இழப்புக்கு 5 ரன் சோ்த்து சமன் செய்தது. டி காக் 3 ரன் சோ்த்து ஆட்டமிழக்க, ரோஹித் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.
இதையடுத்து நடைபெற்ற 2-ஆவது சூப்பா் ஓவரில் முதலில் ஆடிய மும்பை 1 விக்கெட் இழப்புக்கு 11 ரன் சோ்த்தது. இதில் ஹாா்திக் பாண்டியா 1 ரன்னுக்கு ஆட்டமிழக்க, கிரன் பொல்லாா்ட் 8 ரன்கள் சோ்த்தாா். 2 உபரிகள் கிடைத்தன.
பின்னா் ஆடிய பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்து வென்றது. கிறிஸ் கெயில் ஒரு சிக்ஸா் உள்பட 7 ரன், மயங்க் அகா்வால் 2 பவுண்டரிகள் விளாசி 8 ரன் சோ்த்தனா்.
ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக ஒரே நாளில் மூன்று சூப்பர் ஓவர்களைக் காணும் வாய்ப்பு ரசிகர்களுக்கு நேற்று கிடைத்தது. இந்த அனுபவம் முதல்முறை என்பதால் அவர்கள் திக்குமுக்காடிப் போனார்கள். ஐபிஎல் போட்டியில் ஓர் ஆட்டத்தில் வெற்றி பெறவே அணிகள் எந்தளவுக்குக் கடுமையாகப் போராடவேண்டியிருக்கிறது என்பதை நேற்றைய ஆட்டங்கள் தெளிவாக உணர்த்தின.
கொல்கத்தா - ஹைதராபாத் ஆட்டத்தில் ஃபெர்குசனும் ரஷித் கானும் சூப்பர் ஓவரில் பந்துவீசினார்கள்.
மும்பை - பஞ்சாப் ஆட்டத்தில் முதல் சூப்பர் ஓவரில் மும்பை சார்பாக பும்ராவும் பஞ்சாப் சார்பாக ஷமியும் பந்துவீசினார்கள்.
பஞ்சாப் பேட்டிங் செய்தபோது பும்ரா வீசினார். யார்க்கர், லோ ஃபுல்டாஸ் பந்துகளைத் தொடர்ந்து வீசி 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
6 ரன்கள் இலக்கு என்பதால் மும்பை அணி சுலபமாக ஜெயித்துவிடும் எனத் தோன்றியது. ஆனால் பும்ராவுக்கு நிகராக ஷமியும் அற்புதமாகப் பந்துவீசினார். அடுத்தடுத்து யார்க்கர்கள் வீசி ரன்களைக் கட்டுப்படுத்தினார். ஷமியின் துல்லியமான யார்க்கரில் ரன்கள் எடுக்க மும்பை பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள். இதனால் அவர்களாலும் 5 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
பிறகு நடைபெற்ற சூப்பர் ஓவரில் மும்பை சார்பாக போல்ட்டும் பஞ்சாப் சார்பாக ஜோர்டனும் பந்துவீசினார்கள். இறுதியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
இந்திய அணி விளையாடும் ஒருநாள், டி20 ஆட்டங்களில் கடைசி ஓவர்களில் யார்க்கர் பந்துகளை வீச ஷமியும் பும்ராவும் பொருத்தமானவர்கள் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் தேவையில்லை.