துபை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாதுக்கு எதிராக பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதற்காக டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயருக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் கூறியிருப்பது: அபுதாபியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஹைதராபாதுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதால், அதன் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயருக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளது.
அபுதாபியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது. இதில், முதலில் பேட் செய்த சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.