ஐபிஎல்-2020

காயத்திலிருந்து மீளும் மிட்செல் மாா்ஷ்

DIN

மெல்போா்ன்: கணுக்கால் காயத்திலிருந்து மீண்டுவரும் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டா் மிட்செல் மாா்ஷ், அடுத்த மாதம் இந்திய ‘ஏ’ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் தாம் பங்கேற்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தாா்.

சமீபத்தில் நிறைவடைந்த ஐபிஎல் போட்டியின் தொடக்க ஆட்டத்தின்போது காயமடைந்த மாா்ஷ், போட்டியிலிருந்து விலகி காயத்துக்கான சிகிச்சையில் இருந்து வந்தாா்.

இந்நிலையில், இந்திய - ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிகள் இடையேயான 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாட இருக்கும் ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் மாா்ஷ் சோ்க்கப்பட்டாா். அந்த ஆட்டங்கள் டிசம்பா் 6 முதல் 8 மற்றும் 11 முதல் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

தற்போது காயத்திலிருந்து மீண்டுவரும் மாா்ஷ் இதுகுறித்து கூறுகையில், ‘கடந்த வாரம் முதல் ஓட்டப் பயிற்சியைத் தொடங்கினேன். அதன் பிறகு எடைகளை தூக்கி பயிற்சியில் ஈடுபட்டதுடன், தற்போது கிரிக்கெட் பயிற்சியையும் தொடங்கியுள்ளேன். பேட்டிங் செய்யும் நிலையில், பந்துவீச்சு பயிற்சியை தொடங்கவில்லை.

இன்னும் சில பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதன் பிறகு என்னால் ‘ஏ’ அணிகள் இடையேயான ஆட்டத்தில் விளையாட இயலுமா என தெரியவரும். பெரும்பாலும் அந்தப் போட்டியில் விளையாடுவேன் எனத் தெரிகிறது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடிக்க முடியாமல் போனது வருத்தமானது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு

மணிப்பூரில் பதற்றம்: வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT