ஐபிஎல் இறுதிப்போட்டிகளில் ஆட்ட நாயகன் விருதுப் பெற்ற கேப்டன்கள் வரிசையில் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹார்திக் பாண்டியா 3வது இடம் பிடித்துள்ளார்.
நேற்று நடந்த ( மே-29) ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று கோப்பையை வென்றது. இதில் சிறப்பாக பந்து வீசிய பாண்டியா 3 விக்கெட்டுகளுடன் பேட்டிங்கிலும் 34 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அதன் மூலம் ஆட்ட நாயகன் விருதினையும் வென்றார்.
இந்த வரிசையில் முதல் இரண்டு இடத்தில் இருப்பவர்கள்:
1. அனில் கும்ப்ளே- 2009இல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக 14 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்தார். ஆர்சிபி அந்த ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினாலும் அவர் ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார்.
2. ரோகித் சர்மா- 2015இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 26 பந்துகளில் 50 ரன் அடித்து ஆட்ட நாயகன் விருதினைப் பெற்றார்.