ஐபில் எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌ அணியைத் தோற்கடித்து குவலிஃபையர்-2க்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.
ஆர்சிபி அணியில் 54 பந்துகளில் 112 ரன்கள் எடுத்த ரஜத் படிதார் ஆட்ட நாயகன் விருதினைப் பெற்றார். அவரது ஆட்டத்தினைக் குறித்து விராட் கோலி கூறியதாவது:
ரஜத் விளையாடியதைப் போன்ற ஆட்டத்தை மிகவும் குறைவாகத்தான் பார்த்துள்ளேன். பெரிய போட்டி, ஆட்டத்தின் அழுத்தம், அன்கேப்ட் பிளேயர் ( அந்நாட்டின் தேசிய அணிக்காக விளையாடாத வீரர்கள்) இந்த மாதிரி ஆடுவதை இப்போதுதான் பார்கிறேன். இது எவ்வளவு முக்கியமான போட்டி என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் செய்தது மிக மிக முக்கியமானது. யாருமே அதை குறைவாக மதிப்பிட முடியாது. ஒரு கிரிக்கெட் வீரராக அவரது சிறப்பான ஆட்டத்தை பாராட்டியே ஆக வேண்டும்.