ஐபிஎல்

ஆர்சிபி கேப்டன் பொறுப்பிலிருந்தும் கோலி விலகல்: ரசிகர்கள் அதிர்ச்சி!

DIN


நடப்பு ஐபிஎல் சீசனுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான விடியோவில் இதுபற்றி விராட் கோலி கூறியது:

"அணியினரிடம் இன்று மாலை பேசினேன். ஐபிஎல் இரண்டாம் பகுதி தொடங்குவதற்கு முன்பு ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். ஆர்சிபி கேப்டனாக இதுவே எனது கடைசி ஐபிஎல். 

அணி நிர்வாகத்தினரிடம் மாலை பேசினேன். கொஞ்ச நாள்களாகவே இது என மனதில் இருந்து வந்தது.

பணிச் சுமையைக் குறைப்பதற்காக டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தேன். 

ஆர்சிபியைத் தவிர வேறு எந்தவொரு அணியிலும் விளையாடுவதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்பதை அணி நிர்வாகத்திடம் தெளிவுபடுத்திவிட்டேன். கடைசி ஐபிஎல் ஆட்டத்தில் விளையாடும் வரை ஆர்சிபி வீரராகவே இருக்க விரும்புகிறேன்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் செளகான் மீதான புகாா் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்

போா்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து குடிநீா் வழங்க உத்தரவு

சிலு.. சிலு..

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT