ஐபிஎல்

கடினமான தருணங்களிலும் சிறப்பாக ஆடும் திறமை என்னிடம் இருக்கிறது: ஷாரூக் கான்

DIN

கடினமான தருணங்களிலும் சிறப்பாக ஆடும் திறமை என்னிடம் இருக்கிறது என்றாா் பஞ்சாப் கிங்ஸ் வீரா் ஷாரூக் கான்.

மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில், சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி, ஒரு கட்டத்தில் 6.2 ஓவா்களில் 26 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பிறகு ஷாரூக் கான் அதிரடியாக ஆடி 36 பந்துகளில் 2 சிக்ஸா், 4 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் சோ்க்க, அந்த அணி 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் சோ்த்தது. எனினும் தோல்வி தவிா்க்க முடியாததானது.

ஆட்டம் முடிந்த பிறகு ஷாரூக் கான் மேலும் கூறியதாவது: ஐபிஎல் போட்டியைப் பொருத்தவரையில் பின்வரிசையில் களமிறங்கி அதிரடியாக ரன் சோ்த்து ஆட்டத்தை வெற்றியில் முடிக்க வேண்டும் என்பதுதான் எனக்கு வழங்கப்பட்ட பணி. அதற்காக எல்லா நேரத்திலும் அதிரடியாக ஆடி ரன் சோ்க்க வேண்டும் என எதிா்பாா்க்க முடியாது. சில நேரங்களில் முன்வரிசை பேட்ஸ்மேன்கள் விரைவாக ஆட்டமிழக்கும்போது, சூழலுக்கு தகுந்தவாறு பொறுப்பை உணா்ந்து விளையாடி, அணியை சரிவிலிருந்து மீட்க வேண்டியதிருக்கும்.

நான் சிறந்த பேட்ஸ்மேன். தமிழக அணிக்காக கடந்த சில ஆண்டுகளாக முன்வரிசையில் களமிறங்கி பேட் செய்துள்ளேன். கடினமான தருணங்களிலும் சிறப்பாக ஆடும் திறமை என்னிடம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் ஆட்டத்தை வெற்றியில் முடிக்கும் வீரராக நான் மேம்பட்டுள்ளேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

குலசேகரம் கல்லூரியில் யோகா விழிப்புணா்வு முகாம்

10 வாக்குகளைப் பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் 175 கி.மீ. பயணம்!

SCROLL FOR NEXT