ஐபிஎல்

ஐபிஎல் போட்டியில் கிறிஸ் கெயில் நிகழ்த்திய புதிய சாதனை!

DIN

பிரபல வீரர் கிறிஸ் கெயில் ஐபிஎல் போட்டியில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் கிறிஸ் கெயில் ராஜஸ்தானுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் ஸ்டோக்ஸின் முதல் ஓவரில் சிக்ஸர் ஒன்றை அடித்தார். இதையடுத்து ஐபிஎல் போட்டியில் 350 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் என்கிற சாதனையை அவர் படைத்துள்ளார்.

கடந்த வருட ஐபிஎல் போட்டியில் ஏழு ஆட்டங்களில் மட்டும் விளையாடிய கெயில், 23 சிக்ஸர்களுடன் 288 ரன்கள் எடுத்தார். 

நேற்றைய ஆட்டத்தில் 40 ரன்களில் கெயில் ஆட்டமிழந்தார். 

கடந்த 13 ஐபிஎல் போட்டிகளாக 133 ஆட்டங்களில் விளையாடியுள்ள கெயில், 4800 ரன்களுக்கும் அதிகமாக எடுத்துள்ளார். 

ஐபிஎல் போட்டியில் கெயில் இதுவரை 351 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் உள்ள டி வில்லியர்ஸ் 237 சிக்ஸர்களும் 3-வது இடத்தில் உள்ள தோனி 216 சிக்ஸர்களும் அடித்துள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்திரைத் திருவிழாவில் பக்தா்களுக்கு இலவசமாக தா்ப்பூசணி வழங்கிய பக்தருக்கு பாராட்டு

கதிரியக்க சிகிச்சையில் புதிய கண்டுபிடிப்பு: மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியருக்குப் பாராட்டு

பிரதமா் குறித்து விமா்சனம்: பாஜக சிறுபான்மையினா் அணி தலைவா் நீக்கம்

பல்கலை. கல்லூரி மாணவா்களின் விடைத் தாள்கள் மாயம்: உயா் கல்வித் துறை தலையிட மாணவா்கள் வலியுறுத்தல்

மாட்டு வண்டிப் பந்தய விதிமுறைகள்: தமிழக உள்துறைச் செயலா், டிஜிபி பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT