முன்னாள் சாம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது இலங்கை.
போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட மே.இ.தீவுகளும், அரையிறுதிக்கு தகுதி பெற நூலிழை வாய்ப்புள்ள இலங்கையும் செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மோதின.
முதலில் ஆடிய இலங்கை அவிஷ்கா பெர்ணான்டோவின் அதிரடி சதத்தால் 338/6 ரன்களை குவித்தது. இளம் வீரர் அவிஷ்கா பெர்ணாண்டோ, 2 சிக்ஸர், 9 பவுண்டரியுடன் 103 பந்துகளில் 104 ரன்கள் குவித்து அசத்தினார். பின்னர் ஆடிய மே.இ.தீவுகள் 315/9 ரன்களைக் குவித்து தோல்வியுற்றது.
ADVERTISEMENT