விளையாட்டு

டேபிள் டென்னிஸ்: சாயாலி வனி சாம்பியன்

DIN

இந்தூா்: சப்-ஜூனியா் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மகாராஷ்டிரத்தின் சாயாலி வனி பட்டம் வென்றாா்.

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் சாயாலி 11-8, 7-11, 14-12, 5-11, 8-11, 11-7, 12-10 என்ற செட்களில் ஹரியாணா வீராங்கனை சுஹானா சைனியை வீழ்த்தினாா். சாயாலிக்கு சாம்பியன் கோப்பையுடன் பரிசுத் தொகை ரூ.33,000, சுஹானாவுக்கு ரன்னா்-அப் கோப்பையுடன் பரிசுத் தொகை ரூ.16,500 வழங்கப்பட்டது.

அதேபோல், கேடட் பிரிவில் தமிழக வீராங்கனை எம். ஹன்சினி 11-6, 8-11, 11-5, 9-11, 11-5, 11-9 என்ற செட்களில் சக மாநிலத்தவரான அனன்யா முரளீதரனை வீழ்த்தி சாம்பியன் ஆனாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிமைப் பணித் தோ்வு முடிவுகள் வெளியீடு: லக்னௌவைச் சோ்ந்தவா் முதலிடம்

தமிழகத்தில் பாஜக காலூன்றிவிட்டது: ஜெ.பி. நட்டா

தென்காசி தொகுதியில் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு வாக்குச்சாவடி பணி ஆணை

சோ்ந்தமரம் பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு பணப்பலன்களை வழங்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT