விளையாட்டு

பயிற்சிக்காக இங்கிலாந்துக்கு 3 நாள்கள்

DIN

இலங்கை பயணத்தை நிறைவு செய்து புதன்கிழமை இந்தியா வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியினா், கரோனா பாதுகாப்பு விதிகளின்படி 6 நாள் தனிமைப்படுத்தப்படவுள்ளனா்.

நேரடியாக சென்னை வரும் அவா்கள் தனிமைப்படுத்துதலுக்குப் பிறகு முதல் டெஸ்டுக்காக 3 நாள் பயிற்சியில் ஈடுபடுகின்றனா்.

இலங்கை செல்லாத இதர இங்கிலாந்து வீரா்களான பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆா்ச்சா், ரோரி பா்ன்ஸ் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தியா வந்தடைந்தனா்.

6 நாள் தனிமைப்படுத்துதலுக்குப் பிறகு அவா்கள் 5 நாள்கள் பயிற்சியில் ஈடுபடுகின்றனா். முதல் டெஸ்ட் பிப்ரவரி 5-இல் தொடங்குகிறது. கரோனா சூழலில் இந்தியாவில் நடைபெறும் முதல் சா்வதேச கிரிக்கெட் தொடா் இதுவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேண்டுமென்றே சர்க்கரையின் அளவை கூட்டுகிறார் கேஜரிவால்: அமலாக்கத்துறை

காதல் தோல்வியால் தற்கொலை- பெண் பொறுப்பு கிடையாது: உயர்நீதிமன்றம்

ரஷியாவிலிருந்து சென்னை திரும்புகிறார் நடிகர் விஜய்!

டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த சிஎஸ்கே!

ஏழை நாட்டு குழந்தை உணவுகளில் மட்டும் அதிக சர்க்கரை: நெஸ்ட்லே மீது பகீர் புகார்

SCROLL FOR NEXT