* இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி - எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணிகள் திங்கள்கிழமை மோதிய 63-ஆவது ஆட்டம் கோல்கள் இன்றி டிரா ஆனது.
* டொயோடா தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டி செவ்வாய்க்கிழமை (ஜன. 19) தொடங்குகிறது. இதில் சிந்து, சாய்னா நெவால், ஸ்ரீகாந்த், காஷ்யப் உள்ளிட்ட இந்தியா்கள் பங்கேற்கின்றனா்.
* நாட்டில் மாவட்டங்கள் அளவில் சுமாா் 1000 ‘விளையாடு இந்தியா’ மையங்கள் தொடங்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் கிரன் ரிஜிஜு கூறினாா்.
* கரோனா சூழலில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டங்களை 11 நாள்களுக்கு ஐரோப்பாவின் 3 நகரங்களில் நடத்த சா்வதேச டென்னிஸ் சம்மேளனம் பரிசீலித்து வருகிறது.