நூல் அரங்கம்

ராமோஜியம் ( நாவல்)

DIN

ராமோஜியம் ( நாவல்) - இரா.முருகன்; பக்.624; ரூ.600;  கிழக்குப் பதிப்பகம், சென்னை-14; -044 - 4200 9603. 

"பொடி'  என்ற பெயரில் எழுதப்பட்ட  சிறுகதை - "ராமோஜியம்'  என்னும்  பெரிய நாவலாக  உருவெடுத்திருக்கிறது. 

ராமோஜிராவ் - ரத்னாபாய்  தம்பதிகள் 17-ஆம்  நூற்றாண்டு  தொடங்கி  20-ஆம்  நூற்றாண்டுகள் வரை பிறக்கிறார்கள் - இறக்கிறார்கள். தங்கள்  விருப்பு வெறுப்புகளின்படி  வாழ்கிறார்கள். ராமோஜி - ரத்னாபாய்  காதல்  அரும்பியது  ( 1935), சென்னையில்  இவர்களின்  திருமணம்  ( 1937),    ஜப்பான்  விமானம்  குண்டு போடுதல் (1943) - ரத்னா பாயின்  அண்ணன் மகள்  பூப்பெய்துவது - டில்லிக்கும்,  காசிக்கும் செல்வது (1944)- ராமோஜிராவ் தம்பதிக்கு குழந்தை வரம்  வேண்டி  திருக்கருகாவூர்  பயணம் மேற்கொள்வது  (1945) - என்று ஆண்டுகள்  குறிப்பிடப்பட்டிருக்கின்றன. வரலாற்றுச் சம்பவங்களை இணைத்து  எழுதப்பட்டுள்ளதால் இது ராமோஜியின்  சுயசரிதம்  போன்ற தோற்றத்தையும்  தருகிறது.   

 ஃப்ளாஷ்பேக் உத்தியில் - பதினேழாம்  நூற்றாண்டில்  மேற்குக் கடற்கரையைத் தனது  கட்டுப்பாட்டில்  வைத்திருக்கும் மராத்திய கப்பல்  படைத்தலைவன் சுனோஜி ஆங்க்ரேவுடன்  பணியில்  சேர்வது  - சரபோஜி ஆங்க்ரே ஆவது, சாகசங்கள்  நிகழ்த்துவதும்,  
பதினெட்டாம் நூற்றாண்டில் - புதுச்சேரி  பிரெஞ்சுக் கவர்னர்  டூப்ளேயின்  துபாஷி  ஆனந்தரங்கம்  பிள்ளை சுகவீனத்துடன் இருக்க, அவருக்குப் பதிலாக   ராமோஜி பணியில்  சேர்ந்து  நாட்டிய நாடகம் அரங்கேற்றும் முயற்சிகளில்   ஈடுபடுகிறார்.  சுவாரசியமான நாவல். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூத்தாநல்லூரில் முன்னாள் அமைச்சா் காமராஜ் அதிமுகவுக்கு வாக்கு சேகரிப்பு

அதிமுகவை விமா்சிக்கும் தகுதி பாஜகவினருக்கு இல்லை: சி.வி.சண்முகம்

தொடர வேண்டாம் இந்த முறைகேடு

முதல்கட்ட தோ்தல்: களத்தில் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள், 2 முன்னாள் முதல்வா்கள்!

உத்தர பிரதேசம்: சரித்திரம் படைக்க காத்திருக்கும் ‘பாகுபலி’ மாநிலம்!

SCROLL FOR NEXT