கொஞ்சும் தமிழில் கவியெழவே
……………கவிதைக் காதல் தந்தாயே..!
பிஞ்சுக் குழந்தை அழும்படியே
……………பிரிந்து சென்றாய் எங்கேயோ..?
தஞ்சம் என்றே வந்தவரைத்
……………தவிக்க விட்டுச் சென்றாயோ..!
நெஞ்சைத் தொட்டக் கவிதைமணி
……………நீண்ட நாளாய்க் காணோமே..?
.
தன்னை மறந்து பாட்டெழுத
……………தமிழில் தலைப்பும் கொடுத்தாயே..!
தென்றல் கவிதைத் தினம்தினமே
……………தந்து விட்டுச் சென்றாயே..!
என்போல் பலரும் ஏங்குகின்றார்
……………எப்போ மீண்டும் வருவாயோ..?
மன்னன் மகுடம் கவிதைமணி
……………மீண்டும் சிரம்மேல் சூடுவாயா..!
- கவிஞர் பெருவை பார்த்தசாரதி