பகுதி - 940

நினது திருவடிகளைத்..
பகுதி - 940

‘நினது திருவடிகளைத் தொழவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவண்ணாமலைக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் என நான்கெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடில், இரண்டு குறில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று என மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனதனத் தானனத் தனதனத் தானனத்

      தனதனத் தானனத்                  தனதான

கறுவமிக் காவியைக் கலகுமக் காலனொத்

         திலகுகட் சேல்களிப்              புடனாடக்

      கருதிமுற் பாடுகட் டளையுடற் பேசியுட்

         களவினிற் காசினுக்              குறவாலுற்

றுறுமலர்ப் பாயலிற் றுயர்விளைத் தூடலுற்

         றுயர்பொருட் கோதியுட்          படுமாதர்

      ஒறுவினைக் கேயுளத் தறிவுகெட் டேனுயிர்ப்

         புணையிணைத் தாள்தனைத்      தொழுவேனோ

மறையெடுத் தோதிவச் சிரமெடுத் தானுமைச்

         செறிதிருக் கோலமுற்            றணைவானும்

      மறைகள்புக் காரெனக் குவடுநெட் டாழிவற்

         றிடஅடற் சூரனைப்               பொரும்வேலா

அறிவுடைத் தாருமற் றுடனுனைப் பாடலுற்

         றருணையிற் கோபுரத்            துறைவோனே

      அடவியிற் றோகைபொற் றடமுலைக் காசையுற்

         றயருமச் சேவகப்                பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com