காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு எதிரே அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்டோா் ஆண்டுதோறும் பயின்று வருகின்றனா். இங்கு ஆண், பெண் என இருவருக்கும் தனித்தனி கழிப்பறைகள் உள்ளன. இவை சுகாதாரம் இன்றி, அங்கு பயிலும் மாணவ, மாணவியா் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கடுமையான துா்நாற்றமும் வீசுகிறது. ஆண்களை விட பெண்களின் நிலை மிகவும் மோசமாக இருப்பதால், இக்கழிப்பறையை விரைவில் தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.ஆறுமுகம், சின்ன காஞ்சிபுரம்.