காஞ்சிபுரம் சங்கூசாபேட்டை சாலியா் தெருவும், பி.எஸ்.கே. தெருவும் சந்திக்கும் இடத்தில் சிறிய பாலம் உள்ளது. இதையொட்டியுள்ள பகுதியில் பெரிய பள்ளம் உள்ளது. மேலும், சாலைக்கு வெளியே பாதாளச் சாக்கடையின் மூடி ஒன்று வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறாக இருந்து வருகிறது. இதனால் விபத்து ஏற்படும் நிலை காணப்படுகிறது. எனவே இப்பள்ளத்தை சீரமைக்கவும், வெளியில் தெரியும் வகையில் ஆபத்தாக உள்ள பாதாளச் சாக்கடை மூடியை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சி.வ.சு.ஜெகஜோதி, காஞ்சிபுரம்.