தண்டையார்பேட்டை வ.உ.சி. நகரில் உள்ள தெற்குத் தெருவில் குடிநீர் பிடிக்கும் இடத்தில் குப்பைகளும், கட்டடக் கழிவுகளும் அதிக அளவில் குவிந்து கிடக்கின்றன. மேலும், குப்பைகளில் இருந்து வரும் துர்நாற்றத்தால், குடிநீர் பிடிக்க வரும் பெண்கள் தொற்றுநோய்களால் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த இடத்தில் உள்ள குப்பைகளை அகற்றுவதுடன், வேறொரு இடத்தில் குப்பைத் தொட்டி அமைக்க பெருநகர மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்.டி.இசையரசு,
தண்டையார்பேட்டை.