சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் இருந்து சூளைமேடு நெடுஞ்சாலை, வன்னியர் தெரு, பெரியார் பாதை வழியாக கோயம்பேடு பேருந்து நிலையம் வரை சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், சிற்றுந்து வந்து செல்லும் நேரங்கள், நிற்கும் இடங்கள் குறித்து முறையான அறிவிப்பு இல்லாதால் பயணிகள் சிரமப்படும் நிலை நீடிக்கிறது. எனவே, சென்னையில் உள்ள சிற்றுந்து சேவைகளின் நேரங்கள், நிறுத்துமிடங்கள் பற்றித விவரக்குறிப்பேட்டை வெளியிட போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்.ரகுநாதன், கோடம்பாக்கம்.