பெருநகர சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் விம்கோ நகரில் உள்ள சக்திபுரம் நகர் தெருக்களில் கடந்த ஆண்டு பாதாள சாக்கடைப் பணிக்காக பள்ளம் தோண்டி குழாய்கள் பதிக்கப்பட்டன. அதன் பிறகு, மேற்கண்ட சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. இதனால், சிறுமழை பெய்தால் கூட சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்தச் சாலையைச் சீரமைக்க பெருநகர சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.கிறிஸ்டி, விம்கோ நகர்.