பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-4, வட்டம் 34-க்கு உள்பட்ட கடும்பாடி அம்மன் கோயில் தெருவில் குடிநீர் குழாய் பதிக்க சாலை தோண்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. மேலும், சாலையின் இருபுறமும் தனியார் வாகனங்கள், கடைகளின் ஆக்கிரமிப்புகள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன. எனவே, இந்தச் சாலையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.கனிஷ்கர்,
சின்ன சேக்காடு.