திருநின்றவூரில் தற்போது இயங்கி வரும் அஞ்சலகம், ரயில் நிலையத்துக்கு அருகாமையில் மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இயங்கி வருகிறது. இந்த அஞ்சலகத்துக்கு செல்ல முதியோரும், மாற்றுத் திறனாளிகளும் ரயில் நிலைய படிக்கட்டுகளில் ஏறி, எதிர் புறம் செல்ல சிரமப்படுகின்றனர். எனவே, திருநின்றவூர் பிரதான சாலைக்கு அஞ்சலகத்தை இடமாற்றம் செய்ய, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வி.ஸ்ரீமதி, திருநின்றவூர்.