சென்னை ராயபுரம் ஸ்டான்லி மருத்துவமனை அருகே இருந்த பேருந்து நிறுத்தத்தை வேறு இடத்துக்கு மாற்றியுள்ளனர். இதனால் மாற்றுத் திறனாளிகள், முதியோர், நோயாளிகள் நீண்ட தூரம் நடந்து சென்று பேருந்து பிடிக்க வேண்டியுள்ளது. மேலும், தற்போது உள்ள இடத்தில் நிழற்குடை அமைக்கப்படாததால் நோயாளிகள் வெயிலில் வாடுகின்றனர். எனவே, பழைய இடத்துக்கே பேருந்து நிறுத்தத்தை மாற்றியமைத்து, நிழற்குடை அமைத்துத் தர வேண்டும்.
- கே.ஆர்.இரவீந்திரன், சென்னை-1.