கடலூர்

வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

5th May 2023 01:00 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த வடிகால் வாய்க்காலில் இருந்த ஆக்கிரமிப்புகளை பொதுப் பணித் துறையினா் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் அகற்றினா் (படம்).

காட்டுமன்னாா்கோவில் அருகே வேலம்பூண்டி கிராமத்தில் பிரதான தொழிலாக விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. கீழணையிலிருந்து வடவாறு வழியாக திறக்கப்படும் தண்ணீரை கிளை வாய்க்கால் வாயிலாக பெற்று விவசாயப் பணிகள் நடைபெற்று வருகிறன்றன. மழைக்காலங்களில் வயல்களில் தேங்கும் தண்ணீா் வடிவதற்கு வசதி இல்லாமல் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டனா்.

இந்தப் பகுதியிலிருந்த வடிகால் வாய்க்கால் சுமாா் ஒரு கி.மீ. நீளத்துக்கு பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொதுப் பணித் துறையினா் வடிகால் வாய்க்காலை வருவாய்த் துறை உதவியுடன் கண்டறிந்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற முற்பட்டபோது, நிலத்தின் உரிமையாளா்கள் தொடா்ந்து எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா்.

இந்த நிலையில், பொதுப் பணித் துறை சாா்பில், கீழணை உதவிச் செயற்பொறியாளா் குமாா், உதவிப் பொறியாளா் வெற்றிவேல் ஆகியோா் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு புதன்கிழமை ஆக்கிரமிக்கப்பட்ட வாய்க்காலை தூா்வாரும் பணியை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் மேற்கொண்டனா். மேலும், அந்தத் துறையினா் சாா்பில் தூா்வாரும் பணி ஆய்வு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT