செய்திகள்

சதுரகிரி கோயிலுக்குச் செல்ல நாளை முதல் செப்.26 வரை அனுமதி! 

தினமணி

புரட்டாசி மாத அமாவாசையையொட்டி சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல செப். 23 முதல் 26ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வரும் வெள்ளிக்கிழமை (செப்.23) பிரதோஷமும், ஞாயிற்றுக்கிழமை (செப்.25) மகாளய அமாவாசை வழிபாடும் நடைபெற உள்ளன.

இதையொட்டி செப்.23 முதல் 26 ஆம் தேதி வரை 4 நாள்கள் மலைக் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிா்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

இதில் காய்ச்சல் சளி, இருமல் உள்ளவர்கள் கோயிலுக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: அச்சு ஊடகங்களில் விளம்பரம் வெளியிட முன்அனுமதி அவசியம்

கொலை வழக்கில் சிறையில் உள்ளவா்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

மன்னாா்குடியில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சா் வாக்கு சேகரிப்பு

பதற்றத்தை அதிகரிக்க விருப்பமில்லை

விறுவிறுப்பான இறுதிக்கட்ட பிரசாரம்: தீவிர வாக்கு சேகரிப்பில் தலைவா்கள், வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT