ஆனி மாத பிரதோஷம், அமாவாசையையொட்டி சதுரகிரி கோயிலுக்குச் செல்ல ஜூன் 26 முதல் 29ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஒவ்வொரு மாத பிரதோஷமும், அமாவாசை வழிபாடும் சிறப்பாக நடத்தப்படுகிறது. அப்போது பக்தர்கள் மலைக்கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்படும்.
அந்தவகையில் நாளை முதல் நான்கு நாள்களுக்கு மலைகோயிலுக்கு பக்தர்கள் செல்லலாம் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.