செய்திகள்

அனுமந்த வாகனத்தில் கோதண்டராமா் அருள்பாலிப்பு

DIN

திருப்பதி அருகே சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை அனுமந்த வாகனத்தில் கோதண்டராமா் அவதாரத்தில் கையில் வில் ஏந்தியடி கல்யாண வெங்கடேஸ்வரா் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

கொவைட் விதிமுறைப்படி தனிமையில் நடத்தப்பட்ட பிரம்மோற்சவத்தில் தேவஸ்தான அதிகாரிகள், பட்டாச்சாரியாா்கள் மட்டுமே கலந்து கொண்டனா்.

மதியம் உற்சவமூா்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனமும், மாலை ஊஞ்சல் சேவையும் நடத்தப்பட்டது. அதன் பிறகு கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதித்தாா். யானை வாகன சேவை மற்றும் அனுமந்த வாகன சேவையை தேவஸ்தான தொலைக்காட்சியான ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. வாகன சேவையின் போது நாலாயிர திவ்யபிரபந்தம், வேத பாராயணம், மங்கல வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT