செய்திகள்

கும்பத்திற்கு தொட்டது துலங்கும் காலமிது: வாரப் பலன்கள் (செப்.18-24)

தினமணி

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (செப்டம்பர் 18 -  24) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

தொழிலில் இருந்த ஏற்றத்தாழ்வுகள் நீங்கும். உடல் ஆரோக்கியமும், மன நிலையும் பலப்படும். பிள்ளைகளால் பெற்றோருக்கும், பெற்றோர்களால் பிள்ளைகளுக்கும் பரஸ்பரம் நன்மை உண்டாகும். 

உத்யோகஸ்தர்களைப் பொருத்தவரை அனைத்து வேலைகளையும் திருப்திகரமாக செய்து முடிப்பார்கள். வருமானம் படிப்படியாக உயரும். வியாபாரிகள் புதிய யுக்திகளைப் புகுத்தி தங்கள் வருமானத்தைப் பெருக்க முனைவார்கள். விவசாயிகளைப் பொருத்தவரை விளைச்சலும், விற்பனையும் அமோகமாக இருக்கும். இதனால் புதிய குத்தகைகளை எடுப்பீர்கள். 

அரசியல்வாதிகள் எடுத்த காரியங்கள் அனைத்தையும் எளிதில் முடித்து வெற்றி அடைவீர்கள். கட்சியில் முக்கியமான சில பொறுப்புகளையும் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு நற்பெயர் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். மாணவமணிகள் கல்வியிலும், விளையாட்டிலும் நல்ல பலனை அடைவார்கள். 

பரிகாரம்: திங்கள்கிழமை விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 18, 19.

சந்திராஷ்டமம்: 22, 23.

*****

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

எதிர்வரும் இடையூறுகளைத் தகர்த்தெறிந்து செய்தொழிலில் ஏற்றம் பெறுவீர்கள். நண்பர்களுடன் சேர்ந்து சாதனைகள் புரிவீர்கள். வரவு செலவு கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். 

உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஒத்துழைப்பும், பாராட்டும் கிடைக்கும். உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வெற்றி பெறுவார்கள். விவசாயிகளின் உடலுழைப்புக்கு இரண்டு மடங்கு பலன் கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும். 

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். கலைத்துறையினர் கடுமையாக உழைத்தால்தான் நல்ல பலனை அடைய முடியும். விரும்பிய பயணங்கள் திட்டமிட்டபடி நிறைவேறும். பெண்மணிகளைப் பொருத்தவரை விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கலாம். மாணவமணிகள் இப்பொழுது செய்யும் சிறிய முயற்சிகளும் அதிக மதிப்பெண்களைப் பெற்றுத் தரும். எளிய உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உற்சாகத்தைப் பெறுவீர்கள். 

பரிகாரம்: மகான்களை வழிபடவும் 

அனுகூலமான தினங்கள்: 18, 20. 

சந்திராஷ்டமம்: 24.

*****

மிதுனம் (மிருகசீரிஷம்3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

எந்த இடையூறுகள் ஏற்படினும் அதனை வெற்றிகரமாகக் கடந்து முன்னேறுவீர்கள். செல்வம் பெருகும். வாகனங்கள் வாங்கும் எண்ணம் ஈடேறும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும். பெரியோர்களால் பாராட்டப்படுவீர்கள்.

உத்யோகஸ்தர்களைப் பொருத்தவரை அலுவலகப் பணிகளில் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை அள்ளுவார்கள். பணவரவு சுமூகமாக இருக்கும். விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள். அனைத்து விஷயங்களிலும் கவனத்துடன் நடந்து கொண்டால் வெற்றி அடையலாம். 

அரசியல்வாதிகள் பெரிய திருப்பங்களை எதிர்பார்க்க முடியாது. கலைத்துறையினருக்கு வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்து கொண்டிருக்கும். பெண்மணிகளுக்கு இது ஒரு மகிழ்ச்சிகரமான காலமாகும். பெற்றோர்களின் அரவணைப்பும் கணவரின் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். மாணவமணிகள் எதிர்கால லட்சியங்களை நோக்கி மனதைச் செலுத்துங்கள். 

பரிகாரம்: நவகிரகங்களைச் சுற்றி வரவும். சிவபெருமானை தியானம் செய்யவும். 

அனுகூலமான தினங்கள்: 19, 20. 

சந்திராஷ்டமம்: இல்லை.

*****

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)


புனிதப் பணிகளில் ஈடுபாடு கூடும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி அடைவீர்கள். உடலிலும் மனதிலும் இருந்த சோர்வுகள் அகன்று உற்சாகம் உண்டாகும். அதேநேரம் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட நேரிடலாம்; கவனமாக இருக்கவும். 

உத்யோகஸ்தர்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். தைரியத்துடன் எதையும் சாதிப்பீர்கள். வியாபாரிகள் புதிய யுக்திகளைப் புகுத்தி வருமானத்தைப் பெருக்குவீர்கள். போட்டி பொறாமைகள் கூடுதலாக இருக்கும். கவனத்துடன் செயல்படவும். விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும். சந்தை நிலவரங்களை சாதுர்யமாக சமாளிப்பீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு அலைச்சல் அதிகரிக்கும். எவரிடமும் வீண் விரோதத்தை வளர்த்துக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த அங்கீகாரத்தைப் பெறுவார்கள்.

புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்மணிகள் தங்கள் கணவருடன் நேசமாகப் பழகி, பிரச்னைகள் அனைத்தையும் பேசித் தீர்த்துக் கொள்வீர்கள். மாணவமணிகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய பெற்றோர்கள் முன்வருவார்கள்.  

பரிகாரம்: பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் உடைத்து வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 19, 21. 

சந்திராஷ்டமம்: இல்லை.

*****

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

சந்தோஷம் மிகுந்திருக்கும் காலமிது. சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அனைத்து வேலைகளையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டாலும் அவை விலகிவிடும்.  

உத்யோகஸ்தர்களுக்கு எந்த விஷயத்தையும் பெரிது படுத்தி பிரச்னைகளை உருவாக்க வேண்டாம். சில காரியங்களில் அவப்பெயர் ஏற்பட்டாலும் முடிவு உங்களுக்கு சாதகமாகவே அமையும். வியாபாரிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு புது குத்தகைகளை எடுக்க முயற்சி செய்வீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு மக்கள் தொடர்பு சீராக இருக்கும். அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கலைத்துறையினருக்கு தொழில் வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் பிரயாணங்களைத் தவிர்த்து விடவும். பெண்மணிகளுக்கு இது திருப்திகரமான காலகட்டமாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். உங்கள் எண்ணங்கள் ஈடேறும். புதிய ஆடை அணிகலன்களை வாங்குவீர்கள். மாணவமணிகள் படிப்பில் அதிக கவனம் செலுத்தவும். 

பரிகாரம்: நந்தீஸ்வரருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 19, 22. 

சந்திராஷ்டமம்: இல்லை.

*****

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)


காரியங்கள் கடினமாக இருப்பதால் செய்து முடிப்பதில் சிரமங்கள் ஏற்படும். இருப்பினும் உங்கள் உறுதியான மனத்தால் தடைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறுவீர்கள். பணப்புழக்கம் சுமாராக இருக்கும். நீதிமன்ற வழக்குகள் சற்று தள்ளிப் போகும். 

உத்யோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகள் உங்கள் மீது கூடுதல் அக்கறை காட்டுவார்கள். வியாபாரிகளுக்கு பண வரவு சீராக இருக்கும். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதி பெருகும்.  மகசூல் லாபம் அதிகரிக்கும். 

அரசியல்வாதிகளுக்கு அதிக தோல்விகளைச் சந்திப்பீர்கள். ஆகவே புதிய முயற்சிகளைத் தள்ளி வைக்கவும். கலைத்துறையினர் சரிவுகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள். சக கலைஞர்களால் நன்மை அடைவீர்கள்.

பெண்மணிகள் தன யோகத்தைக் காண்பார்கள். கணவருடனான அன்பு மேலோங்கும். ஆரோக்யத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். மாணவமணிகள் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். உடற்பயிற்சிகள் செய்து உடலை பேணிக்காப்பீர்கள். 

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் பெருமாள், தாயாருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 18, 22. 

சந்திராஷ்டமம்: இல்லை.

*****

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் பண நடமாட்டம் சற்று அதிகமாகவே இருக்கும். தைரியத்துடன் எதையும் சமாளிக்கும் ஆற்றல் பெறுவீர்கள். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். ஆன்மிகவாதிகளும், பக்தி மார்க்கத்தில் உள்ளவர்களும் அமைதியான முறையில் செயல்பட்டு வெற்றி அடைவார்கள். 

உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் எதிர்பார்த்ததைவிட அதிக அனுகூலங்களைப் பெறுவார்கள். வியாபாரிகள் பெரிய அளவில் வியாபாரத்தை விருத்தி செய்ய முயற்சி எடுப்பீர்கள். விவசாயிகளுக்கு தானிய விற்பனை மகிழ்ச்சிகரமாக நடைபெறும்.  

அரசியல்வாதிகள் திட்டமிட்ட வேலைகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். கலைத்துறையினர் கவனத்துடன் உழைத்தால் எதிர்பார்த்த வருமானத்தைப் பெறலாம். பெண்மணிகள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். எந்தக் காரியத்திலும் மிகுந்த கவனம் செலுத்தி வரவும். உடன்பிறப்புகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவமணிகள் கடுமையாக உழைத்தால் அதற்கேற்ற பலன்களை பெறலாம். விளையாட்டுகளிலும் வெற்றிவாகை சூடலாம். 

பரிகாரம்: குரு தட்சிணாமூர்த்தியை வணங்கி வரவும். 

அனுகூலமான தினங்கள்: 19, 21. 

சந்திராஷ்டமம்: இல்லை.

*****

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

குடும்பத்தில் அமைதி நிலவும். ஜீவன வகையில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் செலுத்தவும்.

உத்யோகஸ்தர்கள் சுறு சுறுப்பாக செயல்பட்டு குறித்த நேரத்திற்கு முன்பாகவே வேலைகளை செய்து முடிப்பார்கள். சிலருக்கு விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் வருகை நல்ல முறையில் இருக்கும். ஓய்வில்லாமல் உழைத்து அதிக லாபம் பெறுவீர்கள். விவசாயிகளுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் இருந்து கடன்கள் கிடைக்கும்.  

அரசியல்வாதிகளைப் பொருத்தவரை மேலிடத்தின் ஆதரவு அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு ஆற்றல் அதிகரிக்கும். ஒப்பந்தங்கள் கைகூடும். பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடு பழகுவார்கள். தங்கள் நட்பு வட்டாரத்திற்கு உதவி செய்து நல்ல பெயர் எடுப்பார்கள். உடல் ஆரோக்யம் பேணவும். மாணவமணிகள் படிப்பில் அனுகூலமான நிலைமை தென்படும். ஆசிரியர்களால் பாராட்டப்படுவீர்கள். 

பரிகாரம்: வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானை வழிபட்டு வர நலன்கள் கூடும். 

அனுகூலமான தினங்கள்: 18, 23. 

சந்திராஷ்டமம்: இல்லை.

*****

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

எடுத்த காரியத்தில் வெற்றிகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் சற்று சிக்கல்கள் ஏற்பட்டு விலகிவிடும். உற்றார் உறவினர்களை நம்பி எதையும் செய்ய வேண்டாம். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புண்டாகும்.  

உத்யோகஸ்தர்கள் சக ஊழியர்களை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கலில் சிரமங்கள் குறையும். கூட்டாளிகளால் நன்மை உண்டாகும். விவசாயிகளுக்கு தானிய உற்பத்தி நன்றாக இருக்கும். சந்தைகளில் பொருள்கள் விற்பனை அதிகரிக்கும். கால்நடைகளாலும் நன்மை ஏற்படும்.  

அரசியல்வாதிகள் கடினமாகப் பாடுபட்டு தங்கள் கெளரவத்தை நிலை நிறுத்திக் கொள்வார்கள். கலைத் துறையினரின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பெண்மணிகள் உற்றார் உறவினர்களைச் சந்தித்து, அவர்களுடன் உற்சாகமாக இருப்பார்கள். பேசும் நேரத்தில் நிதானம் தேவை. மாணவமணிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். விளையாட்டுகளில் ஈடுபட்டு மகிழ்ச்சியடைவீர்கள். 

பரிகாரம்: தினமும் ராமபக்த ஆஞ்சநேயரை வணங்கி வரவும். 

அனுகூலமான தினங்கள்: 19, 24. 

சந்திராஷ்டமம்: இல்லை.

*****

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

மகிழ்ச்சிகரமான செய்திகள் தேடி வரும். அதேநேரம் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டிய நேரமிது. குடும்பப் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும். 

உத்யோகஸ்தர்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட வேலைகளில் நல்ல அனுகூலம் அடைவார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் விட்டுக்கொடுத்துச் செல்வதால் லாபம் அடைவார்கள். விவசாயிகள் தங்கள் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முயற்சி செய்வார்கள். அதில் வெற்றியும் அடைவார்கள். 

அரசியல்வாதிகள் அமைதியாக இருக்க வேண்டிய காலகட்டமாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழாது. இருப்பினும் சக கலைஞர்களின் ஆதரவினால் அனுகூலம் உண்டாகும். பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பு, பாசம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உருவாகும். பெற்றோர்களின் உடல் நிலையில் கவனம் செலுத்துவீர்கள். மாணவமணிகளுக்கு கடும் முயற்சி செய்து வெற்றி பெறவேண்டிய காலகட்டமாகும். உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். 

பரிகாரம்: பார்வதி தேவியை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 20, 22. 

சந்திராஷ்டமம்: இல்லை.

*****

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

தொட்டது துலங்கும் காலமிது. நினைப்பது நிறைவேறும். எதிரிகளும் உங்களிடம் பணிந்து செல்வார்கள். திடீர் பணவரவு ஏற்படும். குடும்பத் தலைவருக்கு ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். இல்லத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும். திருமண ஏற்பாடுகள் நடைபெறும். 

உத்யோகஸ்தர்கள் சிறப்பாகப் பணிபுரிந்து மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள். எதிர்வரும் இடையூறுகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பார்கள். வியாபாரிகளுக்கு சற்று மந்தமான நிலைமை ஏற்படும். புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். விவசாயிகளுக்கு கால்நடைகளால் ஆதாயம் கிடைக்கும். 

அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். அதோடு புதிய திட்டங்களின் மூலம் பெயரும் புகழும் வளரும். பெண்மணிகளைப் பொருத்தவரை இல்லத்தில் குதூகலமான சூழ்நிலையைக் காண்பார்கள். ஆன்மிகத்தில் ஆர்வம் ஏற்படும். சுப நிகழ்ச்சிகளால் மன உற்சாகம் ஏற்படும். மாணவமணிகளுக்கு கல்வியில் போதிய கவனம் செலுத்துவீர்கள். உடற்பயிற்சிகளை தினமும் மேற்கொள்வீர்கள். 

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சிவதரிசனம் செய்வது உகந்தது. 

அனுகூலமான தினங்கள்: 22, 23. 

சந்திராஷ்டமம்: 18, 19.

*****

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

உங்கள் செயல்களில் தடைகள் உண்டாகக்கூடும். பொருளாதாரத்தில் சிறிது சிரமங்கள் ஏற்படலாம். அதேநேரம் உங்களுக்கு தெய்வ அனுகிரகம் அதிகரிக்கும். விலகிப் போன உறவினர்கள் திரும்பி வருவார்கள். 

உத்யோகஸ்தர்கள் பதட்டப்படாமல் அமைதியாக வேலைகளைச் செய்து மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவார்கள். வியாபாரிகள் புதிய வழிகளில் வருமானத்தைப் பெருக்க நினைப்பார்கள். கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். விவசாயிகள் பிற்காலத் திட்டங்களுக்காக செலவு செய்ய நேரிடும். மகசூல் அதிகரிக்கும். 

அரசியல்வாதிகள் கவனமாக செயல்படவும். மக்களுக்கான போராட்டங்களில் மட்டும் கலந்து கொள்ளவும். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். சிலருக்கு விருது பெறும் வாய்ப்புகள் கிடைக்கும்.

பெண்மணிகளைப் பொருத்தவரை அனைவரிடமும் கவனத்துடன் பழகவும். குடும்பத்தில் நடைபெறும் சுபகாரியங்களில் குழப்பம் ஏற்படலாம். எனவே எச்சரிக்கையாக இருக்கவும். மாணவமணிகள் படிப்பில் போதிய கவனம் செலுத்தவும். விளையாட்டிலும் கவனமாக இருக்கவும். 

பரிகாரம்: பைரவரையும், துர்க்கையையும் வணங்கி வரவும். 

அனுகூலமான தினங்கள்: 19, 24. 

சந்திராஷ்டமம்: 20, 21.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் பிறழ் சாட்சியம்

டிஎன்பிஎஸ்சி தொகுதி-4 போட்டித் தோ்வு: மாவட்ட மைய நூலகத்தில் மாதிரித் தோ்வு

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்: கு. செல்வப்பெருந்தகை

பாமகவினா் தீவிர வாக்கு சேகரிப்பு

கல்வி சந்தைப் பொருளாகி விட்டது: சீமான்

SCROLL FOR NEXT