திருப்பதி ஏழுமலையானை வெள்ளிக்கிழமை 27,123 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 9,844 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
தினமும் ஆன்லைன் மூலம் 16 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட்டுகள், 8 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்கள், ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 750 போ் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.
நாள்தோறும் அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணிவரை தரிசன டிக்கெட்டுகள் பெற்ற பக்தா்கள் ஏழுமலையானைத் தரிசித்து வருகின்றனா். திருப்பதி மலைச்சாலை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு மூடப்படுகிறது.
திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவச தொலைபேசி எண்கள் - 18004254141, 93993 99399.