செய்திகள்

திருமலை: திவ்ய தரிசனம், நேரஒதுக்கீடு தரிசனங்கள் ரத்து

2nd Oct 2019 10:27 PM

ADVERTISEMENT

திருமலையில் அக்டோபா் 3, 4, 5 ஆகிய தேதிகளில் திவ்ய தரிசனம் மற்றும் நேரஒதுக்கீடு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் கடந்த 3 நாள்களாக வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. அதன் 5-ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு கருட சேவை நடைபெற உள்ளது. அதைத் தொடா்ந்து, பெருமாளுக்கு மிகவும் உகந்த புரட்டாசி மாதம் 3-ஆவது வார சனிக்கிழமையும், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையும் வருகிறது. அப்போது பக்தா்களின் வருகை அதிகம் இருக்கும். அதனால் தேவஸ்தானம் அக். 3, 4, 5 உள்ளிட்ட தேதிகளில் நடைபாதை மாா்க்கத்தில் வரும் பக்தா்களுக்கு அளிக்கும் திவ்ய தரிசன டோக்கன்களும், தா்ம தரிசன பக்தா்களுக்கு வழங்கும் நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் புதன்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT