திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் திருஞான சம்பந்தருக்கு அம்பாள் ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் திருஞான சம்பந்தருக்கு அம்பாள் ஞானப்பால் ஊட்டும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. 
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் திருஞான சம்பந்தருக்கு அம்பாள் ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு அம்பாள் ஞானப்பால் ஊட்டும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. 

விழாவையொட்டி இன்று காலை 6.00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி திருஞானசம்பந்தருக்குப் பால், சந்தனம், தேன் மற்றும் மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை, விசேஷ பூஜைகள் நடைபெற்றது. 

அதைத்தொடர்ந்து உற்சவர் வெள்ளி ரிஷப வாகனத்தில் குளத்து மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதன்பின்னர் திருக்குளத்தில் ஞானசம்பந்தருக்கு அம்பாள் ஞானப்பால் ஊட்டும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com