தேரில் பவனி வந்த குமரகோட்டம் முருகப் பெருமான்

வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி, குமரகோட்டம் முருகப் பெருமான் புதன்கிழமை திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருத்தேரில் பவனி வந்த முருகப் பெருமான். 
திருத்தேரில் பவனி வந்த முருகப் பெருமான். 


வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி, குமரகோட்டம் முருகப் பெருமான் புதன்கிழமை திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற குமரகோட்டம் முருகன் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா மே 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, காலை மாலை இரு வேளைகளிலும் ஆடு, சூரிய, சந்திர, தேவேந்திர, மயில், பூத, கேடயம் மங்களகிரி, யானை, புலி உள்ளிட்ட வாகனங்களில் முருகப் பெருமான் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதையடுத்து, புதன்கிழமை காலை வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார். பின்பு, ராஜவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com