தில்லைக் காளிக்கு மகா அபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

மாசி மாத அமாவாசையை முன்னிட்டு, சிதம்பரம் எல்லையில் வீற்றிருக்கும் தில்லைக் காளியம்மனுக்கு மகா அபிஷேகம்..
தில்லைக் காளிக்கு மகா அபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

மாசி மாத அமாவாசையை முன்னிட்டு, சிதம்பரம் எல்லையில் வீற்றிருக்கும் தில்லைக் காளியம்மனுக்கு மகா அபிஷேகம், சிறப்பு அர்த்தசாம பூஜை செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

அமாவாசை, பௌர்ணமி தினங்கள், அஷ்டமி, செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு கால நேரத்தில் காளிக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் தீராதக் கடன், பகைவர்கள் தொந்தரவு, பூர்வ ஜென்ம சாப தோஷங்கள் நீங்கும், சித்தம் தெளியும் என்பது ஐதீகமாகும்.

மாசி மாத அமாவாசையை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை இரவு கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபிரம்மசாமுண்டி ஆகிய சந்நிதிகளில் நெய் தீப ஆராதனை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன.

தொடர்ந்து, தில்லைக் காளியம்மனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம், தைலக்காப்பு, குங்குமக் காப்பு ஆகியவை செய்யப்பட்டு, வாசனை திரவியம், வெட்டிவேர், விலாமிச்சு வேர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மகா அபிஷேகத்தை கண்டு தரிசித்தனர்.

அமாவாசை சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை அமாவாசை அர்த்தசாம அபிஷேக மண்டலி நிர்வாகி எஸ்.வைத்தியநாதன் உள்ளிட்ட பக்தர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com