திருவல்லிக்கேணி பெருமாள் கோயிலில் மாசி மாத தெப்ப உற்சவம் துவக்கம்

சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் மாசி மாத தெப்ப உற்சவம் நேற்று விமரிசையாகத் துவங்கியது.  
திருவல்லிக்கேணி பெருமாள் கோயிலில் மாசி மாத தெப்ப உற்சவம் துவக்கம்


சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் மாசி மாத தெப்ப உற்சவம் நேற்று விமரிசையாகத் துவங்கியது.  

திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் தெப்ப உற்சவம் ஏழு நாட்கள் விமரிசையாக நடைபெறும். அதன்படி மாசி மாத தெப்ப உற்சவம் நேற்று துவங்கியது. 

முதல் நாளான நேற்று மாலை 6.30 மணிக்கு தெப்பத்தில் எழுந்தருளிய உற்சவ மூர்த்தி பார்த்தசாரதி பெருமாள் குளத்தில் ஐந்து முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் உற்சவ மூர்த்தி மாடவீதிகளை வலம் வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா கோவிந்தா என்று கோஷம் எழுப்பியப்படி வழிபாடு செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com