தோல் நோயால் அவஸ்தைப்படுபவர்களா நீங்கள்? இதோ உங்களுக்கான பரிகாரங்கள்!

சூரியக் குடும்பத்தில் உள்ள 9 கிரகங்களில் அதிமுக்கியமாக 7 கிரகங்களை மட்டும் தான் ஜோதிடவியல்
தோல் நோயால் அவஸ்தைப்படுபவர்களா நீங்கள்? இதோ உங்களுக்கான பரிகாரங்கள்!

சூரியக் குடும்பத்தில் உள்ள 9 கிரகங்களில் அதிமுக்கியமாக 7 கிரகங்களை மட்டும் தான் ஜோதிடவியல் பண்டைய காலம் தொட்டே விவரிக்கிறது. வேத கால ஜோதிட சாஸ்திரத்தில், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி போன்ற இந்த 7 கிரகங்கள் மட்டும் தான் மனித உடலைக் குறிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. 

இதில் புதன் மட்டும் தான் மனித உடலின் தோல் பாகத்தை ஆட்சி செய்கிறார். அதற்கான காரகரும் ஆவார். ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில், புதன் வலிமைப் பெற்றிருந்தால், துடிப்பான, ஆரோக்கியமான மற்றும் மின்னும் தோலினைப் பெற்றவர் ஆகிறார். அதுவே, வலிமை குன்றிய புதனால், ஒரு ஜாதகர் தோல் சம்பந்தமான வியாதிகளை நிச்சயம் பெறுவார் / பெற்று அவதியுறுவார்.

இனி, இந்த கட்டுரையில் தோல் நோய் வகைகளைப் பற்றியும் அதன் தீர்வுகளைப் பற்றியும் அறியலாம். மேலும், இந்த கட்டுரையில், எப்படித் தோல் நோய்களை புதன் ஆட்சி செய்கிறது என்பதனையும் அதனால், ஏற்படும் அவதிகளைப் பற்றியும் காணலாம். இயற்கை பாபர்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு போன்ற கிரகங்கள் பல்வேறு வகைகளில் புதனோடு சேருகிற போது பலவகை தோல் வியாதிகளை ஏற்படுத்தும். ராகு ஒருவரின், தோல் வியாதியின் பிரச்னை எந்த அளவு ஒரு ஜாதகருக்கு உள்ளது என்பதனை வெளிப்படுத்தும். சனி கிரகம் ஒரு ஜாதகரின் தோலின் வறட்சி தன்மையை விவரிக்கும். அந்த தோல் நோயின் தீவிரத்தை, சூரியனும், செவ்வாயும் எடுத்தியம்பும். மேலும், உடலின் பல பாகங்களில் அதன் மூலம் ஏற்படும் ரண காயங்கள் / புரையோடிப் போன நிலைகளை விவரிக்கும். 

அதே சமயம், தோலைப் பிரதிபலிக்கும் புதன், அது பாதிப்படைந்த இடம் / வீடு போன்றவற்றைக் கொண்டு உடலின் எந்த பாகத்தை அது பாதித்திருக்கிறது எனலாம். உதாரணத்திற்கு, ஒரு ஜாதகருக்கு 1ஆம் வீடு பாதிப்படைந்திருந்தால், அந்த ஜாதகரின் முகத்தின் தோலில் அது பிரச்னையைக் காண்பிக்கும். இது போல் ஒருவரின் ஜாதகத்தில் புதன் எங்கெங்கு பாதிப்படைந்து உள்ளதோ அந்தந்த பகுதியில் பிரச்னையைக் காண்பிக்கும் என்பதனை அறியவும்.

தோல் நோய் வகைகள் 

               1.          சொறி சிரங்கு                                ECZEMA       

               2.           பொடுகு அரிப்பு                            DANDRUFF 

               3.           பருக்கள்   / கொப்புளங்கள்       PIMPLES  / BOILS

               4.            தோல் அழற்சி                               PSORIASIS 

               5.            வெண்புள்ளி நோய்                     LEUCODERMA

                                 
1.  சொறி சிரங்கு ( ECZEMA)

உலகில் உள்ள மக்கள் தொகையில் 3.05 சதவீதம் மக்கள் இந்த நோயால் அவதியுறுகிறார்கள் என விக்கிப்பீடியா மூலம் அறியப்படுகிறது. இந்த நோய்க்கான மூலகாரணம் இன்னும் அறியப்படாதது / தெளிவடையாதது, வேதனை தான். எப்போது ஒருவரின் ஜாதகத்தில் ராகு இணைவு ஏற்படுகிறதோ அந்த ஜாதகருக்கு இந்நோய் இருப்பது சாதாரணம் தான். ராகு, புதன் இணைவு நிச்சயம் இது போன்ற நோய்க்கு காரணம் ஆகிறது. இவ்விரு கிரகங்களின் இணைவு ராசி சக்கரத்தில், எந்த வீட்டில் இருக்கிறதோ அந்த வீட்டிற்குண்டான உடல் பாகத்தில் இந்த நோய் தாக்கும். உதாரணத்திற்கு, இந்த இணைவு ஒருவரின் ஜாதகத்தில் 3ஆம் வீட்டில் இருப்பின் அந்த ஜாதகரின் கைகள் / அக்குளில் இந்த நோய் வர அதிக  வாய்ப்புள்ளது. நோயின் தீவிரத்தை, சூரியனும், செவ்வாயும் எடுத்தியம்பும். 

ஜோதிட ரீதியான பரிகாரங்கள்

தேவையானவர்களுக்கு, போர்வை தானம் செய்யலாம். மரகதம் கல் அணிவது நோயின் வீரியத்தைக் குறைக்கும்.

2. பொடுகு அரிப்பு (DANDRUFF)

பொதுவாக, மக்கள் இவ்வகை பொடுகு அரிப்பை, தலை முடியால் வருவதாகவே கருதுகின்றனர். ஆனால், இது ஒரு தோல் நோய் தான். இந்த கிரகத்தில் உள்ள 50 சதவீத உயிர் இனங்கள் இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். உலர் தோல் தான் இந்த நோய்க்கான பொதுவான காரணமாகும். மேலும், இது வந்துபோகும் ஒரு நோய் என்றால் அது மிகை ஆகாது. குளிர் காலங்களில், இதன் தாக்கம் அதிகமாகவே இருக்கும். சனி கிரகம் தான் உலர் கிரகம் ஆகும். எனவே இவரின் பங்கு புதன் கிரகத்துடன் இணையும் பங்கே இந்த பொடுகு அரிப்பு வர ஏதுவாகும். உச்சந்தலையில் ஏற்படும் கோளாறு தான் அதனால், கால புருஷ தத்துவப்படி மேஷ ராசியில் சனி, புதன் இணைவு இந்த நோய் வருவதற்கான காரணம் ஆகும்.

ஜோதிட ரீதியான பரிகாரங்கள் 

நிலக்கடலை, நிலக்கடலையில் செய்யப்பட்ட பண்டங்கள் அல்லது கடலை எண்ணெய் மற்றும் எள், எள்ளினால் செய்யப்பட்ட பண்டங்கள் அல்லது நல்லெண்ணெய் தானம் சிறந்தது.

3. பருக்கள் / கொப்புளங்கள் PIMPLES / BOILS

ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த பருக்கள் PIMPLES வர மூல காரணம், ஒருவர் உடலில் உள்ள பித்தமே. வலிமையான சூரியன் மற்றும் செவ்வாய் ஒருவரின் லக்கினத்தின் மீது செல்வாக்கு ஏற்படும் போது மற்றும் புதனின் மீதும் ஆதிக்கம் செலுத்தும் போது இவ்வகை நோய் ஏற்பட ஜோதிட ரீதியான ஒரு காரணமாகும். இது ஒரு சிறு பிரச்னை தான் என எண்ணினாலும், தற்போதைய ஆராய்ச்சி கூற்றுகள் படி இது ஒரு மனஅழுத்த நோய்க்கான காரணமாகும். ஆயினும் இதனைக் கட்டுக்குள் கொண்டுவந்து நிர்வகிக்க முடியும். 

ஜோதிட ரீதியான பரிகாரங்கள்

ஒவ்வொரு வாரமும் கோதுமை மற்றும் வெல்லத்தாலான பண்டங்களை தானம் செய்தல் தீர்வாகும். காரமான உணவு வகைகளைத் தவிர்த்தல் நல்லது.

4. தோல் அழற்சி (PSORIASIS)

இது ஒரு வகையான தோல் பிரச்னை. எனவே இந்த நோய் கண்டறிதல் அவசியமாகிறது. உலக மக்கள் தொகையில், 2 முதல் 4 சதவீதம் வரை மர்மமான இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகச் செய்கின்றனர். இன்று வரை இதன் மூல காரணம் கண்டறியப்படாமலே உள்ளது வேதனைக்குரியதே. ஏனெனில், திடீரென வெடித்துக் கிளம்பும் இந்த அறிய வகை தோல் நோய்க்கான தோன்றுதல் மற்றும் காணும் போது அச்சம் ஏற்படவே செய்யும். இதற்கு ஜோதிட ரீதியான காரணம் என்னவென்றால், ராகு மற்றும் கேதுக்களின் அச்சுக்கு இடையில் வலிமை குறைந்த புதன் (புதன் தான் நின்ற இடத்தில் அளித்த குறைவான பரல்கள் / ஷட் பலம் குறைந்த புதன், இயற்கை அல்லது லக்கின பாபர்களால் ஏற்படும் பார்வை அல்லது ஏதேனும் ஒரு தொடர்பு / நீச்ச புதன்) மட்டுமே காரணி ஆக இருக்கும். 

ஜோதிட ரீதியான பரிகாரங்கள்

பறவை இனங்களுக்கு உணவு (தானியம் போன்றவை ) அளிப்பது, தேவையான நோயாளிகளுக்கு மருந்து அளித்தல் போன்ற இரண்டு மட்டுமே சரியான பயனுள்ள பரிகாரமாக இருக்கும்.

மேலும் ஏராளமான தோல் நோய்கள் உள்ளன. எல்லாவற்றையும் இந்த ஒரு கட்டுரையில் கொணர்வதென்பது சற்றே கடினம் தான். எல்லாவகை தொகுத்தளிக்கப்பட்ட தோல் நோய்களுக்கான பரிகாரங்களை விட மிகச் சுருக்கமான ஒன்று உள்ளதென்றால், அது மரகத கல் மட்டுமே ஆகும். மரகத கல் புதனுக்குரிய நவரத்தினங்களில் ஒன்றாகும். எனவே, இதனை மோதிரமாக அணிவதால், அந்த புதன் கிரகத்தின் ஆற்றலை அதிகரிக்கச் செய்யமுடியும். இறுதியில் இதுவே குற்றமற்ற ஒரு செய்கையாகி ஒரு ஜாதகரின் தோலினை நோய் ஏதும் தாக்காமல் பல பளபளப்பாக வைத்திருக்க முடியும்.

மேலே கூறிய தோல் சம்பந்தமான நோய்களுக்குக் கூறிய பரிகாரங்கள், சிலருக்குப் பரிகாசம் செய்யத் தோன்றினாலும், அந்த பரிகாரங்களைச் செய்து வரும் போது அந்த நோய்க்கான அறிகுறிகள் குறைவதைக் காணத்தான் செய்வார்கள். ஜோதிடம் மூலம் நோய் வரும் காரணங்களை ஏற்கும் நாம் இதனையும் தெரிந்து செய்துவந்தால், நிச்சயம் கைமேல் பலன் காணவே முடியும். 

ஷீர்டி சாயியைப் பணிவோம் அனைத்து நலன்களையும் பெறுவோம். 

- ஜோதிட ரத்னா தையூர். சி.வே. லோகநாதன்

தொடர்புக்கு: 98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com