திருமலை ஏழுமலையானின் அன்னதான அறக்கட்டளைக்கு அமெரிக்க வாழ் இந்திய தொழிலதிபர் புதன்கிழமை ரூ. 1.1 கோடியை நன்கொடையாக வழங்கினார்.
அமெரிக்க வாழ் இந்திய தொழிலதிபர்களான மாதவி, நகேஷ் தம்பதி திருமலைக்கு வந்தனர். அவர்கள் திருமலை ஏழுமலையானின் அன்னதான அறக்கட்டளைக்கு புதன்கிழமை காலை ரூ. 1.1 கோடியை நன்கொடையாக வழங்கினர். இதற்கான வரைவோலையை அவர்களிடமிருந்து தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் பெற்றுக் கொண்டார்.