ஏழுமலையானை உச்சநீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தன் குடும்பத்தினருடன் வழிபட்டார். திருமலைக்கு செவ்வாய்க்கிழமை காலை வந்த அவரையும், அவரது குடும்பத்தினரையும் தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசனத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டுத் திரும்பினர்.
இதையடுத்து, நீதிபதி சூரியகாந்த் குடும்பத்தினரை ரங்கநாயகர் மண்டபத்தில் அமர வைத்து பண்டிதர்களால் வேத ஆசீர்வாதம் செய்வித்து ஏழுமலையான் தீர்த்தம், லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள், ஏழுமலையான் - பத்மாவதி தாயார் படம் ஆகியவற்றை அதிகாரிகள் வழங்கினர்.