உடன்குடி உச்சினிமாகாளி அம்பாள் கோயிலில் கொடை விழா தொடக்கம்

உடன்குடி வைத்திலிங்கபுரம் உச்சினிமாகாளி அம்பாள் கோயில் கொடை விழா இன்று தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.
உடன்குடி உச்சினிமாகாளி அம்பாள் கோயிலில் கொடை விழா தொடக்கம்

உடன்குடி வைத்திலிங்கபுரம் உச்சினிமாகாளி அம்பாள் கோயில் கொடை விழா இன்று தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

இதையொட்டி, கோயிலில் இன்று மாலை 5 மணிக்கு 508 திருவிளக்கு பூஜை, அம்பாளுக்கு மாக்காப்பு அலங்காரத்துடன் தீபாராதனை, இரவு 11 மணிக்கு அம்பாள் கும்பத்தில் பவனி நடைபெறுகிறது. 

செவ்வாய்க்கிழமையான நாளை காலை 8 மணிக்கு கண்டு கொண்ட விநாயகர் ஆலயத்தில் இருந்து பால்குடம் எடுத்தல், காலை 9 மணிக்கு கும்பாபிஷேகம், பகல் 12 மணிக்கு மகா தீபாராதனை, 1 மணிக்கு கும்பம் பவனி, மாலை 4 மணிக்கு பெண்கள் காணிக்கை செலுத்துதல், நள்ளிரவு 12 மணிக்கு அம்பாளுக்கு சந்தனக் காப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை, அதிகாலை 1 மணிக்கு அலங்கார சப்பரத்தில் அம்பாள் பவனி ஆகியவை நடைபெறுகிறது.

புதன்கிழமை (ஜூன் 26) காலை 10 மணிக்கு அம்பாளுக்கு பொங்கல் வைத்தல், மஞ்சள் நீராடுதல், மாலை 4 மணிக்கு பிரசாதம் வழங்ககுதல் ஆகியவை நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com