நாளை லத்தேரி வேணுகோபால் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

லத்தேரி அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள வேணுகோபால் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.  


லத்தேரி அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள வேணுகோபால் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.  
ஸ்ரீ சிவசக்தி நகரில் ஸ்ரீ கிருஷ்ணா அறக்கட்டளை சார்பில், ஸ்ரீராதா ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபால் சுவாமி கோயில் அமைக்கப்பட்டுள்ளது. விழாவை முன்னிட்டு, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் புதன்கிழமை தொடங்கின. 
தொடர்ந்து, வியாழக்கிழமை காலை 8 மணி முதல் அக்னி பிரதிஷ்டை ஹோமம், அட்சய விமோசனம், அதிவாசதிருமஞ்சனம் உள்ளிட்டவையும், மாலை நவ கலச திருமஞ்சனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. சோழவரம் ஸ்ரீதர் பட்டாச்சாரியார் இந்த கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்க உள்ளார். இதில், உ.வே.ஸ்ரீமத் ஜீயர் சுவாமிகள் உள்ளிட்ட ஆன்மிகப் பெரியவர்கள் பங்கேற்க உள்ளனர். 
 விழாவுக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளையின் தலைவர் டி.நடராஜன், உப தலைவர் டி.என்.ராதாகிருஷ்ணன், கௌரவ அங்கத்தினர் கே.ருத்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள், கிராம மக்கள் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com