ஏரிகாத்த ராமர் கோயில்ஆனி மாத பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது

மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயிலில் ஆனிமாத பிரம்மோற்சவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆனி மாதத்தில் 10 நாள்கள் நடைபெறும் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு
மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயிலில் நடைபெற்ற கொடியேற்றம். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் சுவாமி.
மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயிலில் நடைபெற்ற கொடியேற்றம். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் சுவாமி.


மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயிலில் ஆனிமாத பிரம்மோற்சவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
ஆனி மாதத்தில் 10 நாள்கள் நடைபெறும் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கோயில் வளாகம் முழுதும் மின்விளக்குகளாலும், வண்ணத் தோரணங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.  
விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக கோயில் கொடிமரத்துக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, மேளதாளத்துடன் கோயில் அர்ச்சகர்கள் கொடியேற்றும் நிகழ்ச்சியை நடத்தினர். 
இதைத் தொடர்ந்து, 10 நாள்களும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா, கருடசேவை, பெரிய தேரோட்டம் போன்றவை நடைபெற உள்ளன. 
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் (பொ) தியாகராஜன் தலைமையில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com