தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள மகா நந்திக்கு 1 டன் காய்-கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
மகரசங்கராந்தி விழாவையொட்டி பல்வேறு வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், அதைத்தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது. மாட்டுப் பொங்கல் பண்டிகையான நேற்று பக்தர்கள் வியாபாரிகள் வழங்கப்பட்ட காய்கறிகளும், பழங்களும், இனிப்பு வகைகளும் வைத்து நந்தியம் பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
மொத்தம் 1 டன் காய்-கனிகள், மலர்கள் இனிப்புகளால் நந்தியம்பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும், பசுக்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.