ஏழுமலையானுக்கு ஆண்டாள் சூடிய மாலை அணிவிப்பு

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலிலிருந்து ஆண்டாள் சூடிய மாலை திருமலை ஏழுமலையானுக்கு புதன்கிழமை
ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்க ஆண்டாள் சூடிய மாலைகளைக் கொண்டு செல்லும் திருமலை ஜீயர்கள். 
ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்க ஆண்டாள் சூடிய மாலைகளைக் கொண்டு செல்லும் திருமலை ஜீயர்கள். 


திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலிலிருந்து ஆண்டாள் சூடிய மாலை திருமலை ஏழுமலையானுக்கு புதன்கிழமை அணிவிக்கப்பட்டது. 
திருமலையில் ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் அன்று ஆண்டாள் நாச்சியார் மகா விஷ்ணுவுடன் இணைந்த உற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி, புதன்கிழமை காலை திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் இருந்து ஆண்டாள் சூடிய மாலை திருமலைக்கு வந்தது. அதை திருமலை ஜீயர்கள் தலையில் சுமந்து கொண்டு மாடவீதியில் வலம் வந்த பின், கோயிலுக்குள் சென்று ஏழுமலையானுக்கு அதை சமர்ப்பித்தனர். அந்த மாலை ஏழுமலையானின் கழுத்தில் அணிவிக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com